தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழக அரசில் இத்தனை வேலையா? ஊதியம் என்ன தெரியுமா?
இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 27ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் வரும் மார்ச் 13ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இன்றி வரும் ஜூன் 23ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய mrb.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யலாம்.