தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 520 காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சுகாதாரத் துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : செவிலியர்
காலிப் பணியிடங்கள் : 520
கல்வித் தகுதி :
- செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் - ரூ.350
- மற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.700 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mrb.tn.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_SNCU_Notification_06022019.pdf அல்லது www.mrb.tn.gov என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












