தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெறலாம்.
பணி : அலுவலக உதவியாளர்
காலிப் பணியிடம் : 28
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி
கூடுதல் தகுதி : இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு
(அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பு தளர்வு உண்டு)
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 ஆயிரம் வரை / மாதம்
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை "அரசு தலைமை வழக்குரைஞர், அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104" என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 22
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களுக்கு www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.