தமிழ்நாடு சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மாநில தத்து வள ஆதார மையம் (TN Govt - SARA)
மேலாண்மை : தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு துறை
பணிகள் : Programme Manager மற்றும் Programme Assistant
கல்வித் தகுதி : 10+2+3 என்ற முறையில் ஏதேனும் ஒரு இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.35,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 02.09.2021 (இன்று கடைசி நாள்) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வுச் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முழு விபரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cms.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.