தமிழ்நாடு அரசிற்கு உட்பட்டு திருநெல்வேலி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருநெல்வேலி (TN Fisheries)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : மீன்வள உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 08
கல்வித் தகுதி :
- மீன்வள உதவியாளர் பணிகளுக்கு தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருத்தல் வேண்டும்.
- மேலும் நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
- மேலும், மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு :
- பொதுப் பிரிவினர் 18 முதல் 30 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள் தவிர) 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டும், எஸ்.சி, எஸ்டி பிரிவினர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், மணிமுத்தாறு என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அல்லது 04634-290807 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.