தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசிற்கு உட்பட்டு திருநெல்வேலி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிற்கு உட்பட்டு திருநெல்வேலி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை, திருநெல்வேலி (TN Fisheries)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : மீன்வள உதவியாளர்‌

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி :

  • மீன்வள உதவியாளர்‌ பணிகளுக்கு தமிழில்‌ நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருத்தல்‌ வேண்டும்‌.
  • மேலும்‌ நீச்சல்‌, மீன்பிடிப்பு, வலை பின்னுதல்‌, அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்‌.
  • மேலும், மீன்வளத்துறையினரால்‌ நடத்தப்படும்‌ ஏதேனும்‌ ஒரு மீனவர்‌ பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்‌ உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.

வயது வரம்பு :

  • பொதுப்‌ பிரிவினர்‌ 18 முதல்‌ 30 வயதுடையவராக இருத்தல்‌ வேண்டும்‌.
  • மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ 18 முதல்‌ 32 வயதிற்கு உட்பட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்‌பினர்‌ (முஸ்லிம்கள்‌ தவிர) 18 முதல்‌ 32 வயதிற்கு உட்பட்டும், எஸ்.சி, எஸ்டி பிரிவினர் 18 முதல்‌ 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்‌.

ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மீன்‌வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை உதவி இயக்குநர்‌, மணிமுத்தாறு என்ற முகவரியில்‌ விண்ணப்பங்களை நேரில்‌ பெற்று உரிய நகல்‌ ஆவணங்களுடன்‌ வரும்‌ 30-ஆம்‌ தேதி மாலை 5 மணிக்குள்‌ சமர்ப்பிக்‌க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அல்லது 04634-290807 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Fisheries Department Recruitment 2021: Application invited for Fisheries Assistant‌ post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X