சென்னையில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களின் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 300
பணி மற்றும் பணியிட விபரங்கள்:-
நிர்வாகம் : தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை-1
பணி : உதவியாளர்
காலியிடங்கள் : 176
ஊதியம் : மாதம் ரூ.18,800 முதல் ரூ.56,500 வரையில்
நிர்வாகம் : தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4
பணி : உதவியாளர்
காலியிடங்கள் : 57
ஊதியம் : மாதம் ரூ.13,000 முதல் ரூ.45,460 வரையில்
நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை - 10
பணி : இளநிலை உதவியாளர்
காலியிடங்கள் : 06
ஊதியம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93
பணி : இளநிலை உதவியாளர்
காலியிடங்கள் : 03
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,800 வரையில்
கல்வித் தகுதி :
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றித்தல் கட்டாயம்.
- கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு : 01.01.2019 அன்று 18 வயது நிரம்பியவர்கள், 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இட ஒதுக்கீடு பெறும் இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.tncoopsrb.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் முறை : தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் உள்ள "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்திச் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.11.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 29.12.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.