தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கால்நடை பராமரிப்புத் துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கால்நடை ஆய்வாளர் நிலை-II
மொத்த காலிப் பணியிடம் : 583
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 46 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படுவோர் 11 மாத கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த பின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை-2 ஆக பணி நியமனம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊதியம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் : ரூ.100, இதனை The Director, Animal Husbandry and Veterinary services, Chennai-35 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை - 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20.12.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/LI_notification_021219_0.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.