தமிழக அரசிற்கு உட்பட்டு திருப்பூரில் செயல்பட்டு வரும் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : சமூகப்பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர்
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வி மற்றும் முன் அனுபவம் :
சமூகப்பணியாளர் :
இளங்கலை, முதுகலைப் பட்டம் (சமூகப்பணி/உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், 2 ஆண்டுகள் குழந்தைகள் ஆலோசனை சேவையில் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர்:
பட்டதாரி (10+2+3 முறை), உளவியல், சமூகவியல் அல்லது சமூகப்பணியில் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குதல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
குறிப்பு : திருப்பூர் மாவட்டத்ச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 10.09.2021-ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண் : 633, 6-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர், என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையல் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0421-2971198 எனும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.