தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்சி பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கணினி இயக்குபவர்
காலிப் பணியிடம் : 45
கல்வித் தகுதி : பி.எஸ்சி கணினி அறிவியல், பி.காம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பி.எஸ்சி கணினி அப்ளிகேஷன், பி.காம் கம்ப்யூட்டர் சயின்ஸ்
ஊதியம் : ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரையில்
வயது வரம்பு : 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/recruit அல்லது http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.