நிர்வாக காரணங்களால், 'டெட்' என அழைக்கப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை, கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டது. ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில், தாள்-1 மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், தற்போது நிர்வாக காரணங்களால், தாள் 1-க்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்படும்.
கணினிவழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்.
அனைத்து தேர்வர்களும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.

அறிவிப்போம்...!
இது குறித்த அறிவிக்கை, தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு (Admit card) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












