தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-ம் தேர்ச்சியடைந்த, மிதி வண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம்
பணி : அலுவலக உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 12
கல்வித் தகுதி : 8-ம் தேர்ச்சி மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், 2-ம் தளம், சென்னை 108 என்ற முகவரியில், அலுவலக நேரங்களில் இலவசமாகப் பெற்றுக்கொண்டு, அதனை தெளிவாகப் பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்வு முறை : பெறப்படும் விண்ணப்பங்களின்படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு அழைக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.09.2019