தமிழக அரசிற்கு உட்பட்டு தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்ட வருவாய்த்துறை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 03
பணி : கிராம உதவியாளர்
கல்வித் தகுதி :
5-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சதவிகிதம் 40 முதல் 50-க்குள் உடையவராக இருக்க வேண்டும். பார்வையற்ற மற்றும் காதுகேளாத நபர்கள் இத்தெரிவிற்கு தகுதியற்றவர்களாவர்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.11,100 முதல் ரூ.35,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் உறையின் மீது "கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021" என குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், போடிநாயக்கனூர்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.11.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் கிடைக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.