இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 29ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்
பணி : Multi-Tasking Staff
பணியிடம் : தமிழ்நாடு
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : tamilnadupost.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:-
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2019
தேர்வு நடைபெறும் தேதி : 22.12.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tamilnadupost.nic.in/rec/MTS Notification 08 11 19.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.