தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான அன்லைன் தேர்வுகள் வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் என மொத்தம் 1178 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 6ம் தேதியன்று அறிவித்தது.
இதற்கான ஆன்லைன் தேர்வுகள் வரும் நவம்பர் 25 மற்றும், 30ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜா புயல் காரணமாக தேர்வுகள் தற்காலியமாக ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, மறு தேர்வு குறித்து தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், ஒத்திவைக்கப்பட்ட வனத்துறை பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு வரும் டிசம்பர் 6 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வனவர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 6ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையிலும், வனக் காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளிலும் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.