TNPSC Notification for Sub Inspector of Fisheries
தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் : மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
ü மீன் துறை சார் ஆய்வாளர்விண்ணப்பிக்கும்
முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2022
கல்வி தகுதி
மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதி அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
மீன் துறை சார் ஆய்வாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 13 இன் படி, ரூ. 35,900 -ரூ. 1,13,500 வரை மாத ஊதியம் பெறுவர்.
நோட் இட் ப்ளீஸ்....!
Ø அறிவிப்பு நாள்: 13.10.2022
Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.11.2022
தேர்வு நாள், நேரம், பாடம்தாள் -1
கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்று
1. மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவல் (பட்டயப்படிப்புத் தரம்)
2. விலங்கியியல் (பட்டயப்படிப்புத் தரம்)
07.02.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை.தாள் -2
பகுதி - அ
கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்) அல்லது பொது ஆங்கிலம் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு கோரும் நபர்கள்)
பகுதி -ஆ
பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
07.02.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை நடக்கும். மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின், தாள்-I மற்றும் தாள்-II பகுதி 'ஆ'வின் வினா தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. அதாவது தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவார்.
வயது வரம்பு
மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.
தேர்வு கட்டணம்
Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-
Ø தேர்வுக் கட்டணம் : ரூ 200/
மறக்காதீங்க
இணையவழி விண்ணப்பத்தை 11.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==