தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து ஜூலை 2க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 05
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவராக இருக்க வேண்டும். மிதி வண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகரிக்கு அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2018
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
அரசு சார்பு செயலாளர்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை-9
மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.