மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தட்டச்சு, சுருக்கெழுத்து பிரிவில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணி : சுருக்கெழுத்தர் கிரேடு 'சி' மற்றும் 'டி'
கல்வித் தகுதி:-
- 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கிரேடு 'டி' பணிகளுக்கு நிமிடத்தில் 80 வார்த்தைகளும், கிரேடு 'சி' பணிகளுக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
- 2018 ஜனவரி 1ம் தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- கிரேடு 'சி' பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
(அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்களின் தரவரிசைப் படி விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 100
- இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 2018 நவம்பர் 21
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 19
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://ssc.nic.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு மையம் குறித்த விபரம் அறிய : www.sscsr.gov.in
கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 06
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_steno2018_22102018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.