நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட துணை அலுவலகங்கள் உட்பட மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில், சுருக்கெழுத்தாளர் என்று அழைக்கப்படும் 'ஸ்டெனோகிராபர்' கிரேடு சி மற்றும் கிரேடு டி பதவிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம்: பணியாளர் தேர்வாணைம்(எஸ்.எஸ்.சி.,)

மேலாண்மை: மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.09.2022
பணியிடங்கள் விவரங்கள்
சுருக்கெழுத்தாளர் (Stenographer)
வயது வரம்பு
கிரேடு 'சி' க்கு 18 முதல் 30 வயது வரையிலும், கிரேடு 'டி' க்கு 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில், பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்
சுருக்கெழுத்தாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பிரிவுகளை சேர்ந்த நபர்கள் யார் என்பது குறித்து அறிவிப்பாணை வாயிலாக தெரிந்து கொள்ளவும்.
தேர்வு முறை
SSC Steno Online Exam
Skill Test

விண்ணப்பிக்கும் முறை
தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், செப்டம்பர் 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
இன்னும் நான்கு நாள் தான் இருக்கு என்பதை மறக்காதீங்க...!
அவசியம் படிக்கவும்...!
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_Steno_20082022.pdf
https://drive.google.com/file/d/16aVoyv35n_Nn0n0Nqii85PzfkH2rwpB6/view


Click it and Unblock the Notifications












