மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியாளர்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. குரூப் பி, சி உள்ளிட்ட 1564 துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (SSC)
பணி : துணை ஆய்வாளர் குரூப் பி மற்றும் சி
மொத்த காலிப் பணியிடங்கள் : 1564
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in/ என்னும் இணையதளம் மூலமான ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.07.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.