மத்திய அரசுத் துறை நிறுவனத்தில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
தேர்வு வாரியம் : பணியாளர்கள் தேர்வாணையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
மொத்த காலிப் பணியிடம் : 8000
வயது : 18 முதல் 2 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 5,200 முதல் ரூ.20,200 வரையில், தரஊதியம் ரூ. 1800 கூடதலாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் https://ssc.nic.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 29.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கணினி சார்ந்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22042019.pdf அல்லது https://ssc.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.