தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் பிரிவில் தற்போது மருத்துவ பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தின் ரயில்வே நலவாழ்வு பிரிவில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் 10 மருத்துவம் மேற்கொள்வோர் மற்றும் 10 செவிலியர் ஊழியர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்கள் நேர்காணல் ஆன்லைன், வாட்ஸ்அப் ஆகியவற்றின் வழியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேற்கண்ட ரயில்வேயில் மருத்துவப் பணிக்கு சேலம் - 2, ஈரோடு - 4, போத்தனூர் - 4 என மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.75,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், செவிலியர் பிரிவில் சேலம் - 2, ஈரோடு - 4, போத்தனூர் - 4 என 10 காலியிடங்கள் உள்ளது. இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.44,900 ஊதியம் வழங்கப்படும்.
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சமாக 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் ஏப்ரல் 16, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாட்ஸ்அப், ஸ்கைப் வழியாக நேர்முத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sr.indianrailway.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.