மத்திய அரசுத் துறையின் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர், உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுத் துறை முத்திரைத்தாள் அச்சகம் (SPMCIL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Supervisor, Junior Hindi Translator, Junior Office Assistant, Junior Time Keeper மற்றும் Junior Technician
மொத்த காலிப் பணியிடங்கள் : 23
கல்வித் தகுதி : மெக்கானிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது பி.டெக், பி.இ, பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள், ஆங்கிலம், இந்தி மொழிப் பெயர்ப்பாளர், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,040 முதல் ரூ.1,00,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.spmcil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5 எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.