மத்திய அரசுத் துறையின் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுத் துறை முத்திரைத்தாள் அச்சகம் (SPMCIL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.spmcil.com/Interface/Home.aspx என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : General Manager(HR), Security Printing & Minting Corporation of India Ltd., 16th Floor, Jawahar Vyapar Bhawan, Janpath, New Delhi - 110 001
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.spmcil.com/Interface/Home.aspx அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.