மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3378 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிறுவனம் : தெற்கு ரயில்வே (Southern Railway)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
- கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 936
- மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை - 756
- சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் - 1686
மொத்த காலிப் பணியிடம் : 3378
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் sr.indianrailways.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 30.06.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
- இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் sr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.