மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையின் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் : தெற்கு ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை பொறியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 142
பணியிடம் : சென்னை
கல்வித் தகுதி :
- JE/P.Way பணிக்கு சிவில் இன்ஜினியர் பிரிவில் 3 ஆண்டு பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- JE/TMO பணிக்கு மெக்கானிக்கல்/ப்ரொடக்ஷன்/ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமென்டேன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008
விண்ணப்பிக்க கடைசி நாள் : 6 ஜூன் 2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற லிங்க்கில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து ஜூன் 6ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகார்ப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












