தெற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலையில் தற்போது விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே துறைக்கு உட்பட்ட பொன்மலை, பெரம்பூர், பொடனூர் ஆகிய பணிமனைகளில் கார்பெண்டர், எலெக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு ஐடிஐ டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தற்போது, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விவரங்கள் வெளியாகியுள்ளது. பணிமனை வாரியாக தனித்தனியாக இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பித்தவர்கள் www.iroams.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக தங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியைப் பார்த்துக்கொள்ளலாம்.