தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குரூப் சி-யின் கீழ் வரும் இந்த பணியிடங்களுக்கு சாரணர் பயிற்சி (என்எஸ்எஸ்) பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தென்மேற்கு ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 11
பணி : குரூப் சி தகுதி 2
காலிப் பணியிடம் : 03
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 50 சதவிகித மதிப்பெண்களுடன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி : குரூப் சி தகுதி 1
காலிப் பணியிடம் : 08
வயதுவரம்பு : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்ஏசி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேற்கண்ட இரு பணியிடங்களுக்கும் சாரணர் அமைப்பில் 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும்.
- தேசிய, மாநில அளவில் நடைபெற்ற சாரணர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
- பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் - ரூ.250.
கட்டணம் செலுத்தும் முறை : Asst.Personnel Officer, HQ, South Western Railway, Hubballi என்ற பெயரில் Hubballi -ல் மாற்றத்தக்க வகையில் IPO ஆக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rrchubli.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்று செய்யப்பட்ட அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Assistant Personnel Officer/HQ, Railway Recruitment Cell, South Central Railway, 2nd Floor, Old General Manager, Office Building, Club Road, Hubballi - 580 023.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 28.01.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.rrchubli.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.