சமூக நலத்துறையில் ஆற்றுப்படுத்துநர் பணி வாய்ப்பு
தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் ஏழு அரசு, ஏழு அரசினர் கூர்நோக்கு இல்லங்களில், காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதி யும் அனுபவமும் உள்ளவர்களி டம் இருந்து விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : வேலூர் சமூக நலம்
மற்றும் ஊட்டச்சத்துதுறைமேலாண்மை : மாநில அரசு
பணி விவரம் :
ஆற்றுப்படுத்துநர்(Counselling)
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.10.2022
காலிப்பணியிடம் : 2
கல்வி தகுதி
உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்ற நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்
தெரிவு செய்யப்படும் உளவில் / ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் (ஒரு வருடத்திற்கு 60 நாட்களுக்கு மிகாமல் / வாரம் ஒருமுறை) மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்குப் போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- (ரூபாய் மட்டும்) வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://vellore.nic.in/ என்ற மா வட்ட இணையதள முகவரியி ல் இருந்து மாதிரி விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலுடன் பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை 12.10.2022 அன்று 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன் சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கியம் மறக்காதீங்க...!நன்னடத்தை அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணாசாலை,(சுற்றுலா மாளிகை எதிரில்) வேலூர்-632001.
தொலைபேசி-0416-2222310.


Click it and Unblock the Notifications












