'ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்...! உங்களுக்கான ஒரு குஷியான வேலைவாய்ப்பு செய்தியை, உங்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 'ஹாய் கைஸ்' இந்த வேலைக்கு நிச்சயம் நீங்க விண்ணப்பிக்க முடியாது என்பதை மறக்காதீங்க...! உங்களுக்கான அறிவிப்பை முன்னரே சொல்லியிருக்கேன்.
கேர்ள்ஸ் என்னனு பார்ப்போம்? சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சி, மாவட்ட இயக்க மேலாண்மை, வட்டார இயக்க மேலாண்மை ஆகிய அலகில் காலியாக உள்ள 12 வட்டார வள பயிற்றுநர் இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தான் இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிர்வாகம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை, சிவகங்கை மாவட்டம்.
மேலாண்மை: மாநில அரசு
பணி விவரம்: வட்டார வள பயிற்றுநர்
காலியிடங்கள் எண்ணிக்கை: 12
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்
காளையார் கோவில், கல்லல், சாக்கோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, தேவக்கோட்டை, கண்ணங்குடி, எஸ்.புதூர் ஆகிய வட்டாரத்தில், காலியாக உள்ள மொத்தம் 12 இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.
கல்வித் தகுதி
• பட்டப்படிப்பு மற்றும் கணினி இயக்கவும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• அதிக பட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும். ஹலோ கேர்ள்ஸ் உள்ளூர் வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
• சுய உதவி குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முன் அனுபவம் இருந்தால் சிறப்பு.
கட்டாயம் கவனியுங்க...!
· நிர்ணயிக்கப்பட்ட நாள், நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
· கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
கஷ்டப்படுத்துறீங்களே..! என நீங்க கேட்டது என் காதுக்கு கேட்டுட்டு... அறிவிப்பை 'பிடிஎஃப்' வடிவில் கீழே கொடுத்து இருக்கோம் கேர்ள்ஸ்...! இப்ப கூலா இருங்க...! அதுவும் கஷ்டம்ங்கனு நினைக்கிற நம்ம ஊர்க்காரங்க உடனே இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பம் இருக்கும். அங்கேயே போய் பெற்றுக் கொள்ளுங்க.
இல்லைனா; https://sivaganga.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து வெளியாகி இருக்கும் அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்து கொண்டு அறியலாம்.
முக்கியம்ங்கோ...
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 16.08.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் 'இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், சிவகங்கை அஞ்சல்-630562, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் பதிவஞ்சல் வாயிலாக வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
· திரும்பவும் நினைவுப்படுத்துறேன் சிவகங்கை கேர்ள்ஸ்... நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
· இது ஒப்பந்த முறையில் நியமிக்கப்படும் பணியிடம் என்பதையும் மறக்காதீங்க...!
· சீக்கிரம் போய் வேலையை பாருங்க... 'வேக்கன்சி கம்மி' கேர்ள்ஸ்.!
· ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!