மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் (SECL) காலியாக உள்ள Graduate மற்றும் Technician Apprentice Training உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 450 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம்:
மத்திய அரசிற்கு உட்பட்டது தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம். தற்போது, இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate மற்றும் Technician Apprentice Training பணிகளை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 450 பணியிடங்கள் உள்ள நிலையில் மத்திய அரசுப் பணிக்காக காத்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
SECL சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Graduate apprentices பணிக்கு 140 காலிப்பணியிடங்களும், Technician apprentices பணிக்கும் 310 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 450 அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
மேற்கண்ட Graduate Apprentices பணிக்கு Mining Engineering பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Technician apprentices பணிக்கு Mining, Mine Surveying பாடங்களில் டிப்ளமோ பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, Apprenticeship Training முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மத்திய அரசின் SECL சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 05.11.2021 தேதியில் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
SECL ஊதியம் :
இப்பணியிடங்களுக்க தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் அதிகபட்சம் ரூ.9,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊதிய விபரம் குறித்த முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் (SECL) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.secl-cil.in/career.php எனும் இணையதளத்தின் மூலம் 05.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். இச்தனைகள் 15.11.2021 முதல் 30.11.2021 வரையில் நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு:
SECL-யின் இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.secl-cil.in/writereaddata/Notification_appr.pdf எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.