மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான எஸ்.இ.சி.எல் நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படு 5500 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற விரும்புவோர் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : எஸ்.இ.சி.எல்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 5,500
பணி : தொழில்பழகுநர் பயிற்சி
பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள் :
- பிட்டர்
- பிளம்பர்
- கார்பெண்டர்
- டர்னர்
- வெல்டர்
- மெஷினிஸ்ட்
- ஸ்டெனோகிராபர்
- கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 23.07.2019 ஆம் தேதியின்படி 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பெயரைப் பதிவு செய்துவிட்டு, பின்னர் நிலக்கரி நிறுவன http://www.secl-cil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.07.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.secl-cil.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.