இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) காலியாக உள்ள உதவி மேலாளர் (பொது, சட்டம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், ஆராய்ச்சி) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 147 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி மேலாளர் (பொது)
மொத்த காலிப் பணியிடங்கள் : 147
கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு புள்ளியியல், பொருளாதாரம், வர்த்தகம், வணிகவியல் உள்ளிட்ட பிரிவில் முதுகலை டிப்ளமோ அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 29 பிப்ரவரி 2020ம் தேதியின்படி விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.28,150 முதல் ரூ.55,600 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.sebi.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sebi.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.