தமிழக அரசின் சென்னை சமூகப் பாதுகாப்புத் துறையின் மூலம் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியான உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றிலும் தற்காலிய முறையில் தேர்வு செய்யப்படவுள்ள இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்புச் சங்கத்தின் இணையதள முகவரியான "https://socialdefence.tn.gov.in/" அல்லது "https://socialdefence.tn.gov.in/news/recruitment-for-the-post-of-accounts-officer-2018/" என்னும் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப் பணியிடம் : 2
காலிப் பணியிடம் : கணக்கு அலுவலர் (1), கணக்கு உதவியாளர் (1)
துறை : தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்புச் சங்கம்.
கணக்கு அலுவலர்:-
பணி அனுபவம் :
- ஏதேனும் ஓர் நிறுவனத்தில் கணக்குகள் துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
- அரசு அலுவலகத்தில் உதவி கணக்கு அலுவலர் அல்லது அதற்கு மேலான பதவிகளில் பணிபுரிச்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பத்தில் இதற்கு முன்பு வேலை செய்த அலுவலகத்தில் இருந்து நடத்தை சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
வயது வரம்பு :-
- 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசுப் பணியில் ஓய்வு பெற்றவராக இருந்தால் 62 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
- ஊதியம் - ரூ.17,500
கணக்கு உதவியாளர்:-
கல்வித் தகுதி : பன்னிரண்டாம் வகுப்பு வர்த்தகம் மற்றும் கணக்கு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் :
- ஏதேனும் ஓர் நிறுவனத்தில் கணக்குகள் துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு முன் பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து நடத்தை சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
வயது வரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் "https://socialdefence.tn.gov.in/" அல்லது "https://socialdefence.tn.gov.in/news/recruitment-for-the-post-of-accounts-officer-2018/" என்னும் முகவரியில் உள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து 2018 செப்டம்பர் 20ம் தேதியன்று மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்/ செயலாளர்,
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூகப் பாதுகாப்புத் துறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லிஸ், சென்னை-10
தொலைபேசி : 044- 26421358.