மத்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது 39 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
மேலாண்மை : மத்திய அரசு
பதவி : துணை மேலாளர்
காலியிடங்கள் : 39
கல்வித் தகுதி :
- சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- சிஐஎஸ்ஏ பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு :
- 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- (எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம் : மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரையில்
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600.
- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு : ரூ.100
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019
ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, மதுரை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2018
இப்பணியிடம் மற்றும் தேர்வு முறைகள் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1543844761142_DM _IA_FINAL.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.