மத்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள புரோபேஷனரி அதிகாரி உள்ளிட்ட 2000 காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : புரோபேஷனரி அதிகாரி
காலிப் பணியிடங்கள் : 2,000
பணியிடம் : நாடு முழுவதும்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி அளிக்கப்படும்.
தேர்வு முறை : பிரிமிலினரி தேர்வு, மெயின் தேர்வு, கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : https://ibpsonline.ibps.in/sbiposmar19/ என்னும் இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி : 02/04/2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22/04/2019
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 750
- எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு - ரூ. 125
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.sbi.co.in
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sbi.co.in அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO 2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












