வங்கிப்பணியெழுத காத்துகொண்டிருக்கும் போட்டிதேர்வு எழுதுவோர்க்கு ஒரு நல்ல செய்தியாக எஸ்பிஐ வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
போட்டி தேர்வு எழுதுவோர்களே வங்கிப்பணிக்காக தயார் செய்யும் போட்டி தேர்வு எழுதுவோர்களே உங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு மொத்தம் 41 பணியிடங்கள் உள்ளன . எஸ்பிஐ வங்கிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் , துணை (மேலாளர்) சட்டம்
, துணை பொது மேலாளர் (சட்டம் ) ஆகிய பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
எஸ்பிஐ வங்கியில் நிரப்படும் பணியிடங்களில் துணை மேலாளர் பணிக்கு ரூபாய் 31,705 முதல் ரூபாய் 45, 950 வரை மாத சம்பள தொகையாக பெறலாம். துணை பொது மேலாளர் பணிக்கு ரூபாய் 68680 , ரூபாய் 76520 வரை சம்பளத் தொகையாக பெறலாம் .
கல்விதகுதி : எஸ்பிஐ பணிக்கு விண்ணப்பிக்க சட்டம் பயின்றிருக்க வேண்டும் . சட்டப்படிப்பை ஐந்து வருடம் முடித்திருப்பவர்கள் 4 வருடம் முதல் 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது தேவையாகும் . எஸ்பிஐ பணிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை விண்ணப்பிக்கலாம் . அக்டோபர் 6 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும் . துணை பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா , சென்ரல் ரெக்ரூட்மெண்ட் டிபார்ட்மெண்ட் பணி, 3தளம் , நாரிமன் பாய்ண்ட் , மும்பை - 400021 என்ற முகவரிக்கு ஹார்டு ஹாப்பி அனுப்ப வேண்டும் .
எஸ்பிஐ வங்கி தேர்வை ஆன்லைன் மற்றும் நேரடி தேர்வுமூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . தேவையான தகவல்களை பெற அனுக வேண்டிய இணையதள முகவரி
சார்ந்த தகவல்கள் :
தேசிய திட்டங்கள் துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க !!