சமூக நலத்துறையில் பாதுகாப்பு அலுவலர் பணி
சேலம் மாவட்டத்தில், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழுள்ள சமூக நல அலுவலகத்தில், ஒராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய, தகுதியும், திறமையும் உள்ள ஆர்வமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
பாதுகாப்பு அலுவலர்(Protection officer)
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2022கல்வி தகுதி
பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து, M.A. Sociology/ Social Work / psycology with Computer knowledge இல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 22 ஆகவும், அதிகபட்சம் 30 ஆகவும் இருத்தல் அவசியம். வயது தளர்வு உள்ளிட்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
இந்த பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில், மாதம் ரூ.30,000 வரை மாத ஊதியம் பெறுவர்.
மறக்காதீங்க...!
விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விபரங்களை 27.10.2022 அன்று மாலை 06.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












