சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட 1101 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விரப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப் பணியிடம் : 1101
அமைப்பாளர் : 316
சமையல் உதவியாளர் : 785
கல்வித் தகுதி:-
- அமைப்பாளர் : 10ம் வகுப்பு தேர்ச்சி
- சமையல் உதவியாளர் : 5ம் வகுப்பு தேர்ச்சி
(எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பு மற்றும் கல்வித் தகுதியில் தளர்வு உண்டு)
வயதுவரம்பு : 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டு
திறன் : சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:-
- அமைப்பாளர் : ரூ.7700 முதல் ரூ.24,200 வரை
- சமையல் உதவியாளர் : ரூ.3000 முதல் ரூ.9000 வரை
தேர்வு முறை : பெறப்பட்ட விண்ணப்பங்களின் தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு அழைப்பாணை அனுப்பப்படும்.
விண்ணப்பம் பெற : ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : விண்ணப்பத்தினைப் பெற்ற அலுவலகத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 16, நேரம் மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் வாயிலாக இயங்கும் சேலம் அங்கன்வாடி மையங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












