மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான செயில் (Sail) நிறுவனத்தில் காலியாக உள்ள ஓவர் மேன், அளவையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : செயில் (Sail)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :
- ஓவர்மேன் - 19
- சுரங்கப் பணியாளர் - 52
- அளவையாளர் - 01
கல்வித் தகுதி :
ஓவர்மேன் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மைனிங்க் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் எஜிஎம்எஸ் சார்பில் வழங்கப்படும் Overmanship சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சுரங்கப் பணியாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஜிஎம்எஸ்-ல் வழங்கப்படும் சுரங்கப் பணியாளருக்கான சான்று மற்றும் Gas Testing & First Aid சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அளவையாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mine's Survey-ல் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் அளவையாளர் சான்று பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : ராஞ்சி
(தொழிற்திறன் தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும். )
விண்ணப்பக் கட்டணம் :
சுரங்கப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150
இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் வழியாக செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sail.co.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.