கிராமப்புற மின்சார கழகத்தில் காலியாக உள்ளஇணை பொது மேலாளர், மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல், சிஏ போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கிராமப்புற மின்சார கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 25
பணி : இணை பொது மேலாளர், மேலாளர், பொது மேலாளர், உதவி அதிகாரி
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி பெற்ற நிறுவனத்தில் சிஏ, Cost and Management Accountancy மற்றும் இளநிலை பொறியியல், பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.2,60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.recl.co.in/recljobs/career.php எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 26.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.1,000
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் தகுதித் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ruraluniv.ac.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












