ஆர்பிஎப் எனும் ரயில்வே போலீஸில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த ஆர்பிஎப் எனும் ரயில்வே போலீஸ் படையில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன. இங்கு தற்போது சப் இன்ஸ்பெக்டர் 452, கான்ஸ்டபிள் 4208 என மொத்தம் 4660 இடங்கள் உள்ளன.
ரயில்வே போலீஸ் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, கான்ஸ்டபிள் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ரயில்வே போலீஸ் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 1.7.2024 அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் 20 - 28, கான்ஸ்டபிள் 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ரயில்வே போலீஸ் பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: இந்த் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, உடல்தகுதி தேர்வு ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு 15.4.2024 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்: இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 250 செலுத்தினால் போதுமானது.
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 14.5.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












