ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் (ஆர்.பி.எஃப்) காலியாக உள்ள 798 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலியிடங்கள் : 798
பணி : பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான தகவல் உள்ளது.
ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.21,700 வரையில்
வயதுவரம்பு : 1.1.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 500 (இதில், ரூ. 400 கணினித் தேர்வின்போது திரும்ப அளிக்கப்படும்.)
- எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்துப் பிரிவு பெண்கள் ரூ. 250 (இந்தக் கட்டணம் கணினித் தேர்வின்போது திரும்ப அளிக்கப்படும்.)
விண்ணப்பிக்கும் முறை : https://rpfonlinereg.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.01.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.tcyonline.com/tcyinfo/pdf/rpf-constable.pdf அல்லது https://rpfonlinereg.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












