மதுரை மாவட்டம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. ஐடிஐ வரைவு சிவில் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- மதுரை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : ஆய்வாளர்
மொத்த காலிப் பணியிடம் : 17
கல்வித் தகுதி : ITI Draughtsman Civil
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.60,300 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியகரம், மதுரை - 625020.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://madurai.nic.in/notice_category/recruitment/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.