காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், ஆலோசகர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் டிப்ளமோ, பட்டதாரி இளைஞர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய காசநோய் கட்டுப்பாட்டு அலுவலகம், காஞ்சிபுரம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப்பணியிடம் : 16
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்
- ஆய்வக உதவியாளர் - 11
- ஆலோசகர் - 02
- மேற்பார்வையாளர் - 03
கல்வித் தகுதி :
ஆய்வக உதவியாளர் : மருத்துவ ஆய்வக உதவியாளர் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஆலோசகர் : இப்பணியிடத்திற்கு எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
மேற்பார்வையாளர் : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரி இளைஞர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 07.02.2020 தேதிக்குள் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் கிடைக்கும் இடம் : மாவட்ட காசநோய் மையம்,மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம் - 631502
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசம்) அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவோர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.