எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : புரோபேஷனரி அதிகாரி
மொத்த காலிப் பணியிடங்கள் : 2000
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் இளங்களைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- 01.04.2019 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை : முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.125
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்பளை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO 2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












