இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 814 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி
பணி : பாதுகாவலர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 814
சென்னை : சென்னையில் மட்டும் 71 பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வித் தகுதி :
10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.10,940 முதல் ரூ.20160 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.rbi.org.in/ என்ற இணையதளம் மூலம் 15.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.450
எஸ்.சி, எ.டி, பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் - ரூ.50
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி திறமை சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rbi.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.