இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள தரவு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்.ஏ, எம்.எஸ்சி, பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி
பணி : தரவு ஆய்வாளர்
மொத்த காலிப் பணியிடம் : 05
கல்வித் தகுதி : M.A Economics, M.Sc Mathematics, B.E Computer Science Engineering, M.Sc Statistics, M.A Econometrics
உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://rbidocs.rbi.org.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22-08-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. (பி.டபிள்யு.டி-பொது/ஓ.பி.சி.) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப/அறிவிப்பு கட்டணம் - ரூ.600.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி-எஸ்.டி. / பி.டபிள்யு.டி-எஸ்.சி.) அறிவிப்பு கட்டணம் - ரூ.100.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3887 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.