இராஜ்ய சபையின் செயலாளர்கள் பதவி நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . விருப்பமும் தகுதியும் உடையோர் நேரடியாக விண்ணப்பிக்கலாம் . 115 துனை செயலாளர் மற்றும் மற்ற காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜ்ய சபை பணியிடங்களில் பணியாற்ற விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 நாள் இறுதி நாளாகும் . அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் . துணைப் பாதுகாப்பாளர், துணை செயலாளர் மற்ற பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
இராஜ்ய சபை பணியிடங்களில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம் . சில பணியிடங்கள் பொருத்து 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது . விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 300 செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பத் தொகை செலுத்த அவசியமில்லை . ராஜ்ய சபா தேர்வுக்கு அங்கிகரிப்பட்ட கல்லுரியில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதுமானது ஆகும் . நாற்பது வார்த்தைகள் டைப்பிங் ஒரு நிமிடத்தில் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்வு முறையானது முதண்மை, எழுத்து தேர்வு, ஸ்கில் டெஸ்ட் மற்றும் நேரடி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
இராஜ்ய சபா இணையத்தளம் மூலம் தேர்வு எழுதுவோர் தகவல்களை விண்ணப்பிக்கலாம் . அத்துடன் தேவையான சான்றிதழ்களை தெரிவிக்க வேண்டும் . சப்மிட் செய்து பதிவு எண் பெற்றுகொள்ளலாம் . அட்மிட் கார்டு டவுன்லோடு செய்ய உதவிகரமாக இருக்கும் . இராஜ்ய சபாவின் பணியிடம் நிரப்பும் அறிக்கையானது மத்திய அரசின் பணி வாய்ப்பு ஆகும் . நல்ல சமபளமும் படிதொகை கிடைக்கும் வாய்ப்புண்டு .
சார்ந்த பதிவுகள் :