இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படையில் (ஆர்பிஎஸ்எஃப்) பல்வேறு இடங்களில் காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 8 ஆயிரத்து 619 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படை பணிக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 8619
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: காவலர்
Constable RPF Vacancies 2018
Zone Name | Men | Women | Total |
SR, SWR, SCR | 804 | 927 | 1731 |
CR, WR, WCR, SECR | 440 | 712 | 1161 |
ER, ECR, SER, ECoR | 1287 | 1391 | 2678 |
NR, NER, NWR, NCR | 1046 | 1006 | 2052 |
NFR | 160 | 180 | 340 |
RPSF | 666 | 0 | 666 |
Grand Total | 4403 | 4216 | 8619 |
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பம் ஆரம்ப தேதி: 01.06.2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.