தமிழக அரசிற்கு உட்பட்டு புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5-வது தேர்ச்சி பெற்ற, சைக்கிள் ஓட்டத்தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 29ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.
நிர்வாகம் : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கிராம உதவியாளர்
மொத்த காலிப்பணியிடங்கள் : 06
வேலைவாய்ப்பு உள்ள வருவாய் கிராமத்தின் பெயர்கள்
- சீரத்தக்குடி
- கண்ணங்காரக்குடி
- பிலயவயல்
- கண்ணனூர் 1 பிட்
- பிலிவலம்
- நெய்க்கோணம்
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 5-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்.
(விண்ணப்பத்தாரர் மேற்கண்ட கிராமத்தையோ அல்லது அதனைச் சுற்றியுள்ள குக்கிராமத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டும்.)
வயது வரம்பு :
- 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பி.சி, எம்.பி.சி, சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : கிராம உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : வட்டாட்சியர் அலுவலகம், திருமயம்
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 29.01.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pudukkottai.nic.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.